இந்திய பிரஜை ஒருவர் பம்பலபிட்டியில் கைது 

பண மோசடியில் ஈடுபட்ட இந்திய பிரஜை ஒருவர் பம்பலப்பிட்டியில் கைது 

by Staff Writer 09-07-2020 | 9:17 AM
Colombo (News 1st) கனடாவில் வேலை வாய்ப்புகளை பெற்று தருவதாக தெரிவித்து ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் இந்திய பிரஜை ஒருவர் பம்பலப்பிட்டியில் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு ஊழல் விசாரணை பிரிவின் அதிகாரிகள் முன்னெடுத்த சுற்றிவளைப்பிலேயே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த இந்திய பிரஜை, கனடாவில் வேலைவாய்ப்புகளை பெற்று தருவதாக தெரிவித்து 1,22,535 ரூபா பணம் மோசடி செய்துள்ளார். கைது செய்யப்பட்ட 32 வயதான சந்கேநபர் இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.