நாட்டில் 2094 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

நாட்டில் 2094 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

by Staff Writer 09-07-2020 | 6:59 AM
Colombo (News 1st) இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 2,094 ஆக பதிவாகியுள்ளது. நேற்றைய தினம் (08) 13 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். பிலிப்பைன்ஸ், பங்களாதேஷ், சவுதி அரேபியா மற்றும் ஈரானிலிருந்து வந்தவர்களே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து 1,979 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 104 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறுகின்றனர்.