வௌிநாட்டிலிருந்து வந்த மேலும் இருவருக்கு கொரோனா

வௌிநாட்டிலிருந்து வருகை தந்த மேலும் இருவருக்கு கொரோனா

by Staff Writer 08-07-2020 | 4:32 PM
Colombo (News 1st) வௌிநாட்டிலிருந்து வருகை தந்த மேலும் இருவருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பங்களாதேஷ் மற்றும் பிலிப்பைன்ஸில் இருந்து நாடு திரும்பிய இருவருக்கே இன்று COVID-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2,084 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, COVID-19 தொற்றுக்குள்ளானவர்களில் 26 பேர் இன்று குணமடைந்துள்ளனர். நாட்டில் 1,967 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. COVID-19 தொற்றுக்குள்ளானவர்களில் 106 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.