வடக்கு மார்க்கத்திலான ரயில் போக்குவரத்தில் தாமதம்

by Staff Writer 08-07-2020 | 9:47 AM
Colombo (News 1st) வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் ஒன்று இன்று (08) காலை வவுனியாவில் அவுசதபிட்டி பகுதியில் தடம்புரண்டுள்ளது. இதன் காரணமாக வடக்கு ரயில் மார்க்கத்திலான போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு - கோட்டைக்கு செல்லும் ரயில் மற்றும் யாழ்ப்பாணத்தில் இருந்து கோட்டை நோக்கி பயணிக்கும் ரயில்கள் தாமதமாக பயணிக்கும் என திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளனர். ரயில் போக்குவரத்தை சீரமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுப்பட்டுள்ளன.

ஏனைய செய்திகள்