கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2081 ஆக உயர்வு

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2081 ஆக உயர்வு

by Staff Writer 08-07-2020 | 7:08 AM
Colombo (News 1st) நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிகை 2,081 ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் (07) 4 புதிய கொரோனா நோயாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். சவுதி அரேபியாவில் இருந்து நாட்டிற்கு வருகை தந்த ஒருவர், எத்தியோப்பியாவில் இருந்து வந்த ஒருவர், கடற்படையின் உறுப்பினர் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவர் உட்பட நால்வருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. கொரோனா தொற்றுக்குள்ளான 1,955 பேர் பூரண குணமடைந்த வீடு திரும்பியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.