சிறுமியை துன்புறுத்திய பெண்ணுக்கு கடூழிய சிறை

வாகரையில் சிறுமியை அடித்து துன்புறுத்திய பெண்ணுக்கு கடூழிய சிறைத்தண்டனை

by Staff Writer 08-07-2020 | 4:57 PM
Colombo (News 1st) மட்டக்களப்பு, வாகரை பகுதியில் சிறுமி ஒருவரை அடித்து துன்புறுத்திய 54 வயதான பெண் ஒருவருக்கு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறுமியின் பாதுகாவலராக செயற்பட்ட பெண் ஒருவருக்கே இன்று கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி M.N.M.அப்துல்லா குற்றவாளிக்கு 02 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். 5000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், அதனை செலுத்த தவறும் பட்சத்தில் மேலும் 3 மாத சாதாரண சிறைத்தண்டனை விதிக்கப்படும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 50,000 ரூபா நட்டஈடு வழங்கப்பட வேண்டும் என நீதிபதி அறிவித்துள்ளார். வாகரையில் 2010 ஆம் ஆண்டு குறித்த சிறுமி துன்புறுத்தப்பட்டதாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் அரச தரப்பு சட்டத்தரணி மாதினி விக்னேஸ்வரன் மன்றில் ஆஜராகியிருந்தார்.