English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
08 Jul, 2020 | 8:03 am
Colombo (News 1st) பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் களஞ்சியத்தில் காணப்படும் போதைப்பொருட்களின் தொகை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இந்த நடவடிக்காக அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் உதவி பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தில் உள்ள அதிகாரிகள் சிலர் பொலிஸாரினால் கைப்பற்றப்படுகின்ற போதைப்பொருட்களை மீளவும் போதைப்பொருள் வியாபாரிகளிடம் வழங்குவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளமையினால், இந் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் 11 பேரும் இன்று (08) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மேலும் ஒருவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
இவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடவத்தை பொலிஸினால் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் ஏனையவர்களும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
20 Jan, 2021 | 02:52 PM
20 Jan, 2021 | 09:46 AM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS