ஹெரோயினுடன் 'பெபூன்' கைது

ஹெரோயினுடன் 'பெபூன்' கைது

by Staff Writer 07-07-2020 | 9:26 AM
Colombo (News 1st) அத்துருகிரிய பகுதியில் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுவின் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 'பெபூன்' என அழைக்கப்படும் கிரிஷான் நிலங்க தாபரே எனும் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். சந்தேக நபரிடமிருந்து 3 கிராம் ஹெரோயினும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேக நபர், திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுவின் தலைவர்களில் ஒருவரான அங்கொட லொக்காவின் உதவியாளர் என்பது தெரியவந்துள்ளது.