பொலிஸ் இன்ஸ்பெக்டர் சமன் வசந்தகுமார சரணடைந்தார் 

போதைப்பொருள் கடத்தல்: தேடப்பட்டு வந்த பொலிஸ் இன்ஸ்பெக்டர் சமன் வசந்தகுமார சரணடைந்தார் 

by Staff Writer 07-07-2020 | 3:47 PM
Colombo (News 1st) போதைப்பொருள் கடத்தல் விவகாரம் தொடர்பில் தேடப்பட்டு வந்த பொலிஸ் இன்ஸ்பெக்டர் சமன் வசந்தகுமார, கடவத்தை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். வெலிவேரிய, ஹிரிகந்த பகுதியை சேர்ந்த 49 வயதான சமன் வசந்தகுமாரவை மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திற்குள் இடம்பெற்றதாகக் கூறப்படும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் இவர் தேடப்பட்டு வந்தார்.