சிறை அதிகாரியின் வங்கி கணக்குகள் குறித்து விசாரணை

சிறைச்சாலை முன்னாள் தலைமை அதிகாரியின் வங்கி கணக்குகள் தொடர்பில் விசாரணை ஆரம்பம்

by Staff Writer 07-07-2020 | 7:35 AM
Colombo (News 1st) நீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் தலைமை அதிகாரியிடம் காணப்பட்ட பல வங்கி கணக்குகள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. குறித்த அதிகாரி தற்போது பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதிகாரியின் வங்கி கணக்கிற்கு நாளாந்தம் பெருந்தொகை பணம் வைப்பிலிடப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பாகவுள்ளன. குறித்த சிறைச்சாலை அதிகாரியின் உதவியாளரால் பணம் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகள் உள்ளிட்ட 40 பேர் இதுவரை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.