சவுதி, கத்தாரிலிருந்து 280 பேர் நாடு திரும்பினர்

சவுதி மற்றும் கத்தாரிலிருந்து 280 பேர் நாடு திரும்பினர் 

by Staff Writer 07-07-2020 | 1:01 PM
Colombo (News 1st) சவூதி அரேபியா மற்றும் கத்தாரிலிருந்து 280 இலங்கையர்கள் இன்று (07) நாடு திரும்பியுள்ளனர். சவூதி அரேபியாவின் ரியாத்திலிருந்து 275 பேர் இன்று காலை 7.10 மணியளவில் நாட்டை வந்தடைந்ததாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் கடமை நேர முகாமையாளர் தெரிவித்துள்ளார். இதேநேரம், கத்தாரிலிருந்து 5 இலங்கையர்களும் இன்று காலை நாடு திரும்பியுள்ளனர். இன்று நாடு திரும்பிய அனைவருக்கும் PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அத்துடன், கொரோனாவினால் பிலிப்பைன்ஸில் சிக்கியிருந்த 41 இலங்கையர்கள் நேற்றிரவு (06) நாடு திரும்பினர். இதேவேளை, சவூதி அரேபியாவிலிருந்து மேலும் 281 இலங்கை பிரஜைகள் இன்று இரவு நாட்டை வந்தடையவுள்ளனர்.