வாகனங்களை கையளிக்காத அமைச்சர்கள் மீது நடவடிக்கை

இதுவரை வாகனங்களை கையளிக்காத இராஜாங்க அமைச்சர்களுக்கு எதிராக நடவடிக்கை

by Staff Writer 07-07-2020 | 11:14 AM
Colombo (News 1st) பதவிக் காலத்தில் பயன்படுத்திய வாகனங்களை இதுவரை அமைச்சிடம் கையளிக்காத இராஜாங்க அமைச்சர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இதுவரை கையளிக்கப்படாத 11 வாகனங்கள் தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு வழங்கிய தகவல்களுக்கு அமைய மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார். பிரிவுகளுக்கு பொறுப்பான அதிகாரிகள் மற்றும் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். பொதுத் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர்கள் சிலரிடமுள்ள 13 வாகனங்கள் இதுவரை கையளிக்கப்படாமை குறித்து முறைப்பாடு கிடைக்கப் பெற்றதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார். இவற்றில் இரண்டு வாகனங்களை முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஒருவர் குறித்த அமைச்சிடம் ஒப்படைத்துள்ளார். இதேவேளை, வாகனங்களை மீள பெற்றுக்கொள்வது தொடர்பில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்து தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று (07) கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இதில் கலந்துகொள்ளுமாறு குறித்த அமைச்சுகளின் அதிகாரிகளுக்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.