பொலிஸாரின் சுற்றிவளைப்பில் 1048 பேர் கைது

பொலிஸாரின் சுற்றிவளைப்பில் 1048 பேர் கைது

by Staff Writer 06-07-2020 | 4:00 PM
Colombo (News 1st) நாடளாவிய ரீதியில் பொலிஸார் முன்னெடுத்த சுற்றிவளைப்புகளில் 1,048 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 594 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரிப்பீட்டர் ரக துப்பாக்கிகளுடன் சந்தேகநபர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹெரோயினுடன் சந்தேகநபர்கள் 301 பேரும் கஞ்சாவுடன் 256 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐஸ் ​போதைப்பொருளுடன் சந்தேகநபர்கள் 26 பேரும் சட்டவிரோத மதுபான போத்தல்களுடன் 467 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் இரவு 12 மணி முதல் நேற்றிரவு 12 மணி வரை அனைத்து பொலிஸ் நிலையங்களையும் மையமாகக் கொண்டு இந்த சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஏனைய செய்திகள்