பொதுத் தேர்தலில் வாக்களிப்பு நேரம் நீடிப்பு

பொதுத் தேர்தலில் வாக்களிப்பு நேரத்தை நீடிக்க தீர்மானம்

by Staff Writer 06-07-2020 | 7:12 PM
Colombo (News 1st) பொதுத் தேர்தல் வாக்களிப்பு நேரத்தை நீடிப்பதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி இடம்பெறும் பொதுத் தேர்தலில் வாக்களிப்பு நேரம் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்களிப்பு நடவடிக்கை இதற்கு முன்னர் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை இடம்பெற்றிருந்தது.