குசல் மெண்டிஸிற்கு பிணை

குசல் மெண்டிஸ் பிணையில் விடுவிப்பு

by Staff Writer 06-07-2020 | 2:45 PM
Colombo (News 1st) விபத்தொன்று தொடர்பில் கைது செய்யப்பட்ட கிரிக்கெட் வீரர் குசல் மென்டிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியதை தொடர்ந்து மேலதிக நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் சந்தேகநபரான குசல் மென்டிஸை விடுவிப்பதற்கு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார். விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு 10 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குசல் மென்டிஸ் வாகன விபத்தொன்று தொடர்பில் பாணந்துறை பகுதியில் நேற்று கைது செய்யப்பட்டார். ஹொரேதுடுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் கொரகாபொல பகுதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான 64 வயதான ஒருவரே விபத்தில் உயிரிழந்தவராவார்.