பஹ்ரைனிலிருந்து 290 பேர் நாடு திரும்பினர்

பஹ்ரைனிலிருந்து 290 பேர் நாடு திரும்பினர்

by Staff Writer 05-07-2020 | 9:22 AM
Colombo (News 1st) பஹ்ரைனிலிருந்து மேலும் சில இலங்கை பிரஜைகள் இன்று (05) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர். விசேட விமானத்தின் மூலம் 290 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்ததாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் கடமை நேர முகாமையாளர் தெரிவித்துள்ளார். PCR பரிசோதனைகளின் பின்னர் இவர்கள் கண்காணிப்பு முகாம்களுக்கு அனுப்பப்படவுள்ளனர். இதேவேளை, துபாய் மற்றும் கத்தாரிலிருந்து 17 பேர் நேற்றிரவு (04) நாட்டை வந்தடைந்துள்ளனர்.