நாட்டில் 2074 பேருக்கு கொரோனா தொற்று

நாட்டில் 2074 பேருக்கு கொரோனா தொற்று

by Staff Writer 05-07-2020 | 7:05 AM
Colombo (News 1st) நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 2,074 ஆக உயர்வடைந்துள்ளது. நேற்றைய தினத்தில் மாத்திரம் 5 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறித்த ஐவரும் கண்காணிப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வௌியிட்டுள்ளது. இவர்களில் அமெரிக்கா, மடகஸ்கார், பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலிருந்து திரும்பிய மூவரும் கத்தாரிலிருந்து நாடு திரும்பிய இருவரும் அடங்குகின்றனர். இதுவரை 1,885 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.