தேர்தலின் பின்னர் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இளைஞர்களிடம் கையளிக்கப்படும்: மைத்திரிபால சிறிசேன

by Staff Writer 04-07-2020 | 9:18 PM
Colombo (News 1st) முன்னாள் ஜனாதிபதியும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன இன்று களுத்துறை வடக்கு பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தார். ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் களுத்துறை மாவட்டக் குழுவின் தலைவர் சுமின் லால் மென்டிஸ் இந்தக் கூட்டத்தினை ஏற்பாடு செய்திருந்தார். இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொதுத்தேர்தலின் பின்னர் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு தாம் ஆலோசகராக இருந்துகொண்டு படித்த இளைஞர்களுக்கு கட்சிப் பொறுப்பினை ஒப்படைக்கப் போவதாகக் குறிப்பிட்டார்.