ஜிந்துப்பிட்டியை சூழவுள்ள பாடசாலைகளின் சுகாதாரப் பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்துமாறு வலியுறுத்தல்

by Staff Writer 04-07-2020 | 8:47 PM
Colombo (News 1st) கொழும்பு - 13, ஜிந்துப்பிட்டியில் கொரோனா நோயாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து, ஜிந்துப்பிட்டியை சூழவுள்ள பாடசாலைகளின் சுகாதாரப் பாதுகாப்பு தொடர்பில் அதிகாரிகள் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. ஜிந்துப்பிட்டி பகுதியை சூழ மத வழிபாட்டுத்தலங்கள் மற்றும் வைத்தியசாலைகள் அமைந்துள்ளதால், இது குறித்து அதிகக் கவனம் செலுத்தப்பட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் குறிப்பிட்டுள்ளது. கடந்த 2 ஆம் திகதி ஜிந்துப்பிட்டியில் கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் பதிவானதை அடுத்து, 31 குடும்பங்களைச் சேர்ந்த 150 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். ஜிந்துப்பிட்டி 129 ஆம் தோட்டப் பகுதி தற்போது மக்கள் நடமாட்டமற்ற இடமாக மாறியுள்ளதுடன், பொலிஸாரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குறித்த நோயாளி சமூகத்திலிருந்து அடையாளம் காணப்பட்டவர் அல்லவென சுகாதாரத் தரப்பினர் தெரிவித்தனர்.