English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
04 Jul, 2020 | 6:39 pm
Colombo (News 1st) மஸ்கெலியாவில் தங்க நகையைத் திருடிய பெண் ஒருவர் உள்ளிட்ட இருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஹட்டன் நீதவான் முன்னிலையில் சந்தேகநபர்கள் இருவரையும் இன்று ஆஜர்படுத்திய போது, எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.
மஸ்கெலியா நகரிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் பணியாற்றிய குறித்த பெண், வர்த்தக நிலைய உரிமையாளரின் மனைவியின் தங்க நகையைத் திருடிச் சென்றுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய, மஸ்கெலியா பொலிஸாரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது, சந்தேகநபரான பெண்ணும் மற்றுமொரு இளைஞரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தங்க நகையை அடகு வைத்து பெற்றுக்கொண்ட பணத்தில் முச்சக்கரவண்டி ஒன்றை கொடுப்பனவு முறையில் கொள்வனவு செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கொள்வனவு செய்யப்பட்ட முச்சக்கர வண்டியையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
11 Mar, 2022 | 08:38 PM
13 Jan, 2022 | 03:48 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS