by Staff Writer 03-07-2020 | 6:54 PM
Colombo (News 1st) ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் தற்போது வாக்குமூலம் பதிவு செய்யப்படுகிறது.
குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் ரணில் விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படுகிறது.
முறிகள் மோசடி தொடர்பில் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன குறிப்பிட்டார்.
கொள்ளுபிட்டி, 05 ஆம் ஒழுங்கையிலுள்ள ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்தில் இந்த வாக்குமூலம் பதிவு செய்யப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.