மின்சார வேலியால் விபரீதம்: உன்னிச்சையில் விவசாயிகள் இருவர் பலி

by Staff Writer 03-07-2020 | 7:24 PM
Colombo (News 1st) மட்டக்களப்பு - உன்னிச்சை பகுதியில் மின்சாரம் தாக்கி விவசாயிகள் இருவர் உயிரிழந்துள்ளனர். விவசாயக் காணிக்குள் காட்டு யானைகள் நுழைவதைத் தடுப்பதற்காக விவசாயிகள் வைத்திருந்த மின்சார வேலியினால் இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளது. மட்டக்களப்பு உன்னிச்சை பகுதியில் யானைகளிடமிருந்து வேளாண்மையைப் பாதுகாப்பதற்காக விவசாயிகள் மின்சார வேலியை அமைத்துள்ளனர். குறித்த பகுதியில் வழமைபோன்று வேளாண்மை காவலுக்காக சென்ற இரண்டு விவசாயிகள் நேற்றிரவு மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்னர். 51 மற்றும் 58 வயதுடைய இரண்டு விவசாயிகளே சம்பவத்தில் பலியானதாகவும் அவர்கள் இருவருமே உறவினர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். ஏறாவூர் திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நசீர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டதை அடுத்து, பிரேத பரிசோதனைக்காக சடலங்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டன.

ஏனைய செய்திகள்