இலங்கை மின்சார சபைக்கு பிரதமரின் பணிப்புரை 

38 மின் உற்பத்தி நிலையங்களை இலங்கை மின்சார சபையின் கீழ் கொண்டு வர நடவடிக்கை

by Staff Writer 02-07-2020 | 6:41 PM
Colombo (News 1st) 38 மின் உற்பத்தி நிலையங்களை இலங்கை மின்சார சபையின் கீழ் கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு இலங்கை மின்சார சபையின் தலைவர் விஜித்த ஹேரத்திற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பணிப்புரை விடுத்துள்ளார். உள்நாட்டு வர்த்தகர்களுக்கு சொந்தமான சிறு மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து மின்சாரத்தைக் கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தம் அடுத்த வாரம் கைச்சாத்திடப்படவுள்ளது. இந்த மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து தேசிய மின்சாரக் கட்டமைப்பிற்கு 75 மெகாவாட் மின்சாரம் கிடைக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.