நாட்டில் 2054 பேருக்கு கொரோனா தொற்று

நாட்டில் 2054 பேருக்கு கொரோனா தொற்று

by Staff Writer 02-07-2020 | 7:00 AM
Colombo (News 1st) நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 2,054 ஆக அதிகரித்துள்ளது. பங்களாதேஷிலிருந்து நாடு திரும்பிய மூவரும் பிரித்தானியாவிலிருந்து வந்த இருவரும் துபாயிலிருந்து நாடு திரும்பிய ஒருவரும் நேற்று (01) தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, 79 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து  வீடு திரும்பியுள்ளனர். இதன் பிரகாரம், கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,872 ஆக உயர்வடைந்துள்ளது.  

ஏனைய செய்திகள்