குமார் சங்கக்கார விசேட விசாரணை பிரிவில் ஆஜர்

குமார் சங்கக்கார விசேட விசாரணை பிரிவில் ஆஜர்

by Staff Writer 02-07-2020 | 9:30 AM
Colombo (News 1st) 2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணியின் தலைவராக செயற்பட்ட குமார் சங்கக்கார, வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று (02) விசேட விசாரணை பிரிவில் ஆஜராகியுள்ளார். முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரான மஹிந்தானந்த அளுத்கமகேவின் கருத்து தொடர்பான விசாரணைகளில் வாக்குமூலம் அளிக்க வருமாறு முன்னாள் அணித்தலைவரான குமார் சங்கக்காரவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இன்று காலை 9 மணியளவில் விசாரணை பிரிவில் ஆஜரான குமார் சங்கக்கார, தொடர்ந்தும் சாட்சியம் வழங்கி வருவதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் தெரிவித்தார். 2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ணக் இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றதாக மஹிந்தனந்த அளுத்கமகே கூறியமை தொடர்பாக விசாரணை நடைபெறுவதுடன் நேற்று உபுல் தரங்கவிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. இந்த விடயம் தொடர்பில், முன்னாள் கிரிக்கெட் தெரிவுக் குழுத்தலைவரான அரவிந்த டி சில்வாவிடமும் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.