கொழும்பு துறைமுக ஊழியர்கள் தொடர் பணிப்பகிஷ்கரிப்பு

கொழும்பு துறைமுக ஊழியர்கள் தொடர் பணிப்பகிஷ்கரிப்பு

by Staff Writer 02-07-2020 | 1:59 PM
Colombo (News 1st) கொழும்பு துறைமுக ஊழியர்கள் தொடர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அனைத்து தொழிற்சங்கங்களும் இன்று (02) கூடி எடுத்த தீர்மானங்களுக்கு அமைய பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுவதாக துறைமுக அதிகார சபையின், ஶ்ரீலங்கா சுதந்திர ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் பிரசன்ன களுத்தரகே தெரிவித்துள்ளார். 3 பளுதூக்கிகளையும் கிழக்கு முனையத்தில் பொருத்தி, பணிகளை ஆரம்பிக்குமாறு ஏற்கனவே கோரப்பட்டதாக அவர் கூறினார். எனினும் அதற்கு தீர்வேதும் வழங்காதமையாலேயே நேற்றைய தினம் (01) 3 ஊழியர்கள் பளுதூக்கியின் மீதேறி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டதாக அவர் குறிப்பிட்டார். இந்த விடயம் குறித்து நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்ததாக ஶ்ரீலங்கா சுதந்திர ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் பிரசன்ன களுத்தரகே தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்க காலத்தில் சீனாவில் இருந்து கொண்டுவரப்பட்ட 3 பளுதூக்கிகள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன. இந்த பளுதூக்கிகளை கிழக்கு முனையத்தில் பொருத்த வேண்டும் என தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன. எனினும் அதற்கு இதுவரை அனுமதி கிடைக்கவில்லை.