by Bella Dalima 01-07-2020 | 3:23 PM
Colombo (News 1st) சிறைக் கைதிகளை இன்று முதல் மீண்டும் பார்வையிட முடியும் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வாரத்தில் ஒரு தடவை ஒரு சிறைக்கைதியை ஒருவர் மாத்திரம் பார்வையிட முடியும் என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்தார்.
கைதியை சந்திக்க வருகின்ற நபர் அவரின் நெருங்கிய உறவினராக இருக்க வேண்டும் எனவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் குறிப்பிட்டார்.
இதேவேளை, தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட கைதிகளை 21 தினங்கள் வரை பார்வையிட முடியாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெளியிலிருந்து கொண்டுவரப்படும் உணவுப் பொருட்கள் மற்றும் குடிபானங்களை கைதிகளுக்கு வழங்குவதற்கு தொடர்ந்தும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக துஷார உபுல்தெனிய சுட்டிக்காட்டினார்.
எனினும், சுகாதாரப் பாதுகாப்பு பொருட்களை வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய குறிப்பிட்டார்.