English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
01 Jul, 2020 | 6:56 pm
Colombo (News 1st) பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவில் ஊழலில் ஈடுபடும் எந்தவொரு பொலிஸ் உத்தியோகத்தருக்கும் மன்னிப்பு வழங்கப் போவதில்லை என இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது.
இன்று மாலை பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்புகளைப் பேணிய குற்றச்சாட்டில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் நான்கு அதிகாரிகள் கைது செய்யப்பட்டதுடன், அதனுடன் தொடர்புபட்ட மேலும் இருவர் தடுத்து விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் அதிகாரிகளிடமிருந்த போதைப்பொருள் கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் இரண்டு வேன்கள், ஜீப் வண்டியொன்று, 3 கோடி ரூபாவிற்கும் அதிக பணம் கைப்பற்றப்பட்டன.
அத்துடன், கையகப்படுத்தப்பட்ட காணி, தங்காபரணங்கள் உள்ளிட்ட சொத்துக்கள் குறித்தும் தெரியவந்துள்ளது.
இந்த விடயம் குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் 25 பேர் கொண்ட மூன்று குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
03 May, 2022 | 08:47 PM
04 Oct, 2021 | 11:30 AM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS