மலேசியாவிலிருந்து 149 பேர் நாட்டை வந்தடைந்தனர்

மலேசியாவிலிருந்து 149 பேர் நாட்டை வந்தடைந்தனர்

by Staff Writer 30-06-2020 | 1:27 PM
Colombo (News 1st) கொரோனா வைரஸினால் மலேசியாவில் சிக்கியிருந்த 149 இலங்கையர்கள் இன்று (30) நாடு திரும்பியுள்ளனர். ஶ்ரீலங்கன் விமான சேவையின் விசேட விமானத்தின் மூலம் இன்று காலை 8.40 மணியளவில் இவர்கள் நாட்டை வந்தடைந்ததாக கட்டுநாயக்க விமான நிலைய கடமைநேர முகாமையாளர் தெரிவித்துள்ளார். அனைவரும் விமான நிலையத்தில் வைத்து PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.