போதைப்பொருள் ஒழிப்பு: புதிய பொறுப்பதிகாரி நியமனம்

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் பொறுப்பதிகாரியாக G.K.J.அபோன்சு நியமனம்

by Staff Writer 30-06-2020 | 4:05 PM
Colombo (News 1st) பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் பொறுப்பதிகாரியாக பிரதி பொலிஸ் மா அதிபர் G.K.J.அபோன்சு நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் வாய்மொழி மூல அனுமதியின் பிரகாரம் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவிற்கு பொறுப்பாக இருந்த பிரதி பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ மெதவத்தவை பொலிஸ் நலன்புரிப் பிரிவிற்கு இடமாற்றம் செய்ய அனுமதி கிடைத்துள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பதில் பொலிஸ் மா அதிபர் C.D.விக்ரமரத்னவின் பரிந்துரையை அடிப்படையாகக் கொண்டு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. நியமனம் மற்றும் இடமாற்றம் தொடர்பான எழுத்து மூல அனுமதியை நாளை மறுதினம் ஆணைக்குழு கூடிய பின்னர் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.