நாட்டில் 2,047 பேருக்கு கொரோனா தொற்று

நாட்டில் 2,047 பேருக்கு கொரோனா தொற்று

by Staff Writer 30-06-2020 | 6:34 AM
Colombo (News 1st) நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 2,047 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் இன்று இதுவரையான காலப்பகுதியில் கொரோனா நோயாளர்கள் மேலும் ஐவர் பதிவாகியுள்ளனர். ஓமானில் இருந்து வருகை தந்தவர்களுக்கே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் (29) மேலும் ஐவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பங்களாதேஷ் - டாக்காவிலிருந்து நாடு திரும்பிய இருவரும் இதில் அடங்குவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 1711 ஆக உயர்வடைந்துள்ளது.  

ஏனைய செய்திகள்