தபால் மூல வாக்குச்சீட்டுகள் ஒப்படைப்பு

தபால் மூல வாக்குச்சீட்டு தபால் திணைக்களத்திடம் ஒப்படைப்பு

by Staff Writer 30-06-2020 | 9:52 AM
Colombo (News 1st) 2020 பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குச்சீட்டுகளை உள்ளடக்கிய காப்புறுதி அஞ்சல் பொதிகள் இன்று (30) தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளன. இன்றும் நாளையும் இந்த நடவடிக்கைகள் இடம்பெறும் என பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இன்று கூடவுள்ளது. எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிக்கும் நேரத்தில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் இன்று ஆராயவுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. இதனை தவிர, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்று ஊடக நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளை சந்திக்கவுள்ளதாகவும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.