வாகனங்களை கையளிக்காதோர் குறித்து விசாரணை

உத்தியோகபூர்வ வாகனங்களை கையளிக்காத அமைச்சர்கள் தொடர்பில் விசாரணை ஆரம்பம்

by Staff Writer 30-06-2020 | 12:00 PM
Colombo (News 1st) உத்தியோகபூர்வ வாகனங்களை இதுவரை கையளிக்காத முன்னாள் இராஜாங்க அமைச்சர்கள் நால்வர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஏனைய இராஜாங்க அமைச்சர்கள் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உத்தியோகபூர்வ வாகனங்கள் மற்றும் நிர்வாகத்தினரை குறித்த இராஜாங்க அமைச்சர்கள் வகித்த அமைச்சுக்களால் பொறுப்பேற்குமாறு அனைத்து அமைச்சகங்களின் செயலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. முன்னாள் இராஜாங்க அமைச்சர்களின் பதவிக்காலம் கடந்த மார்ச் 2 ஆம் திகதியுடன் நிறைடைந்துள்ளதால், உத்தியோகபூர்வ வாகனங்களையும் நிர்வாக உறுப்பினர்களையும் தம் வசம் வைத்திருப்பது சட்டத்திற்கு புறம்பானது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.