English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
30 Jun, 2020 | 9:02 pm
Colombo (News 1st) இம்முறை பொதுத் தேர்தலுக்கு சுமார் 1000 கோடி ரூபா செலவாகலாம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடர்பில் ஆணைக்குழுவில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வௌியிட்டபோதே அவர் இதனைக் கூறினார்.
பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பை ஜுலை மாதம் 13, 14 , 15 , 16 , 17 ஆம் திகதிகளில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
குறித்த திகதிகளில் வாக்களிக்க முடியாமற்போவோருக்கு ஜுலை 20 , 21 ஆம் திகதிகளில் தபால் மூல வாக்குச் சீட்டுகளில் புள்ளடியிடுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.
இம்முறை பொதுத் தேர்தலின் வாக்கெண்ணும் பணிகள் தேர்தல் நாளான ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி இடம்பெறாது என்பதுடன் ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி காலை 8 மணி முதல் வாக்கெண்ணும் பணிகளை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, முதலாவது தேர்தல் முடிவை ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி பிற்பகல் 4 மணியளவில் வௌியிட முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு நம்பிக்கை வௌியிட்டுள்ளது.
இதேவேளை, தேர்தல் சட்டத்தை மீறுகின்ற வேட்பாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.
09 Nov, 2020 | 07:23 PM
12 Aug, 2020 | 01:08 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS