களுத்துறை நகர சபை முதல்வர் கைது

களுத்துறை நகர சபை முதல்வர் கைது

by Staff Writer 29-06-2020 | 4:03 PM
Colombo (News 1st) தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் களுத்துறை நகர சபை முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளார். குறிப்பிட்ட இன மக்களின் சொத்துக்களை சேதப்படுத்தியமையே நகர முதல்வர் கைது செய்யப்படுவதற்கான காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மே மாதம் 23 ஆம் திகதி களுத்துறை வர்ணன் பெர்னாண்டோ மைதானத்தின் மூடியிருந்த நுழைவாயிலின் பூட்டை உடைத்து, சிலர் பலவந்தமாக நுழைய முயற்சித்ததாக மைதான முகாமையாளரினால் களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. இந்த முறைப்பாட்டுக்கிணங்க கடந்த 26 ஆம் திகதி களுத்துறை பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.