by Staff Writer 28-06-2020 | 8:55 AM
Colombo (News 1st) விருப்பு வாக்குகளை பெற்றுக் கொள்வதற்காக ஒரே கட்சி வேட்பாளர்களுக்கு இடையில் மோதல் இடம்பெறும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கட்சியின் தலைவர்களே இவ்வாறான மோதல்களை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அவ்வாறு இல்லாத பட்சத்தில், பொதுத் தேர்தல் அண்மிக்கும் போது வன்முறைச் சம்பவங்கள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாகவும் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.