3 வாகனங்கள் ஒன்றுடனொன்று மோதி விபத்து: 8பேர் காயம்

தெற்கு அதிவேக வீதியில் 3 வாகனங்கள் ஒன்றுடனொன்று மோதி விபத்து; 8 பேர் காயம் 

by Staff Writer 28-06-2020 | 1:09 PM
Colombo (News 1st) தெற்கு அதிவேக வீதியின் பின்னதுவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 8 பேர் காயமடைந்துள்ளனர். இன்று (28) காலை 8.30 மணியளவில் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். காலியிலிருந்து பயணித்த காரொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதிக்கருகிலுள்ள மதிலுடன் மோதியுள்ளது. குறித்த கார், பஸ் மற்றும் வேனுடன் மோதியே மதிலுடன் மோதுண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் வேன், மற்றுமொரு காருடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது வேனிலிருந்த 8 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டதுடன், அவர்கள் அனைவரும் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.