உலகில் 10 மில்லியன் பேருக்கு கொரோனா தொற்று உறுதி

உலகில் 10 மில்லியன் பேருக்கு கொரோனா தொற்று உறுதி

by Staff Writer 28-06-2020 | 7:17 AM
Colombo (News 1st) உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 10 மில்லியனை கடந்துள்ளது. இதுவரை 501,262 பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 5.4 மில்லியனாக உயர்வடைந்துள்ளது. இதேவேளை, இந்தியாவில் அடுத்த மாத இறுதிக்குள் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை ஒரு மில்லியனை தாண்டுமென நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை தற்போது 5 இலட்சத்தை கடந்துள்ளது. உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்று அதிகம் பாதித்த நாடுகளில் அமெரிக்கா , பிரேஸில், ரஷ்யாவுக்கு அடுத்ததாக இந்தியா பதிவாகியுள்ளது. இந்தியாவில் நேற்று (27) ஒருநாளில் மாத்திரம் கொரோனா தொற்றுக்குள்ளான 18,500 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடந்த 24 மணித்தியாலங்களில் 385 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. இந்தியாவில் மொத்தமாக 16,103 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.