by Staff Writer 28-06-2020 | 11:46 AM
Colombo (News 1st) நேட்டோ படைகளை தாக்குவதற்கு நிதியுதவி வழங்கியதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்துள்ளது.
நேட்டோ படைகள் மீது தாக்குதல் நடத்துவதற்கு தமது நாட்டு இராணுவ புலனாய்வு பிரிவினால் தலிபான்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படையினர் மீதும் நேட்டோ படையினர் மீதும் தாக்குதல் நடத்த நிதியுதவி வழங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த குற்றச்சாட்டை ரஷ்யாவும் தலிபான் அமைப்பும் மறுத்துள்ளன.