19பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

இன்று 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

by Staff Writer 27-06-2020 | 5:29 PM
Colombo (News 1st) நாட்டில் கொரோனா நோயாளர்கள் மேலும் 20 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1639 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, நாட்டில் மேலும் 19 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இன்று இதுவரை அடையாளங்காணப்பட்ட 19 கொரோனா நோயாளர்களும் பங்களாதேஷ் - டாக்காவில் இருந்து வருகை தந்தவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2033 ஆக அதிகரித்துள்ளது. தொற்றுக்குள்ளானவர்களில் 383 பேர் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.