ஊருக்குள் நுழைந்த கரடி சரணாலயத்தில் விடப்பட்டது 

பொத்துவில் பிரதேசத்திற்குள் நுழைந்த கரடி குமண விலங்குகள் சரணாலயத்தில் விடப்பட்டது

by Staff Writer 27-06-2020 | 7:39 PM
Colombo (News 1st) அம்பாறை - பொத்துவில் பிரதேசத்திற்குள் நுழைந்த கரடி ஒன்று பிடிக்கப்பட்டு, இன்று முற்பகல் பாதுகாப்பாக குமண விலங்குகள் சரணாலயத்தில் விடப்பட்டுள்ளது. கரடி பொத்துவிலை அண்மித்துள்ள காட்டுப் பகுதியிலிருந்து இன்று காலை 9 மணியளவில் குறித்த பகுதிக்குள் நுழைந்துள்ளது. இதனையடுத்து, இந்த விடயத்தை லாஹூகல வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு பிரதேச மக்கள் தெரியப்படுத்தியுள்ளனர். வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், அம்பாறை கால்நடை வைத்தியரின் கண்காணிப்பில் கரடியை மயங்கமடையச் செய்துள்ளனர். சுமார் 8 வயதான இந்தக் கரடி குமண விலங்குகள் சரணாலயத்தில் விடப்பட்டதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.