திரையரங்குகள் மீள திறப்பு

திரையரங்குகள் மீள திறப்பு; அரங்கேற்றங்களுக்கு அனுமதி

by Staff Writer 27-06-2020 | 4:13 PM
Colombo (News 1st) நாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகளும் இன்று முதல் மீள திறக்கப்படவுள்ளதாக கலாசார அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி திரையரங்குகளைத் திறக்க தீர்மானித்துள்ளதாக கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பந்துல ஹரிஸ்சந்திர தெரிவித்தார். திரையரங்குகளை திறப்பதற்கு முன்னர், கிருமி ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் திரையரங்குகளுக்கு வருகை தருவோர் பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகள் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பந்துல ஹரிஸ்சந்திர தெரிவித்தார். கொரோனா வைரஸ் காரணமாக நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து திரையரங்குகளும் கடந்த மார்ச் 14 ஆம் திகதி மூடப்பட்டன. இதேவேளை, மேடை நாடகங்கள் மற்றும் நடன அரங்கேற்றங்களுக்கும் இன்று முதல் அனுமதி வழங்கப்படுவதாக கலாசார அமைச்சு அறிவித்துள்ளது.