பஸ் வேகக்கட்டுப்பாட்டை இழந்தது: 15 பேர் காயம்

கொழும்பிலிருந்து யாழ் நோக்கி பயணித்த சொகுசு பஸ் வேகக்கட்டுப்பாட்டை இழந்தது: 15 பேர் காயம்

by Bella Dalima 27-06-2020 | 3:55 PM
Colombo (News 1st) வவுனியா - ஓமந்தை பகுதியில் பஸ் ஒன்று விபத்திற்குள்ளானதில் 15 பேர் காயமடைந்துள்ளனர். இன்று அதிகாலை 3.45 அளவில் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறினர். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த சொகுசு பஸ் ஒன்றே வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளாகியது. விபத்தில் காயமடைந்தவர்கள் ஓமந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஓமந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.