English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
27 Jun, 2020 | 8:09 pm
Colombo (News 1st) விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர்களில் ஒருவரான கருணா அம்மான் மீது யுத்த குற்றம் தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும் என சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தின் முன்னாள் சிரேஷ்ட சட்ட ஆலோசகர் அநுர மத்தேகொட
தெரிவித்துள்ளார்.
டெய்லி மிரர் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்தக் கருத்தினை தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரான விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா அம்மான் தெரிவித்த கருத்து தொடர்பில் இலங்கை அரசாங்கம் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில் விரைவாக முறைப்பாடு செய்ய வேண்டும் எனவும் அநுர மத்தேகொட வலியுறுத்தியுள்ளார்.
யுத்தத்தில் ஏற்பட்ட மேலதிக பாதிப்புகள் குற்றங்களாகக் கருதப்படுவதில்லை என்றாலும், அவரால் கொல்லப்பட்ட பிக்குகளினுடைய கொலைச் சம்பவம் திட்டமிட்டு செய்யப்பட்ட ஒரு செயல் என அநுர மத்தேகொட தெரிவித்துள்ளார்.
குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் இலங்கை சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில் முறைப்பாடு செய்ய முடியும் என அநுர மத்தேகொட மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
03 Jul, 2020 | 05:56 PM
29 Jun, 2020 | 09:57 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS