கொழும்பின் சில பகுதிகளில் நாளை நீர்வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில் நாளை 18 மணித்தியால நீர்வெட்டு

by Staff Writer 26-06-2020 | 4:24 PM
Colombo (News 1st) கொழும்பின் சில பகுதிகளில் நாளை (27) இரவு 10 மணி முதல் நாளை மறுதினம் (28) மாலை 4 மணி வரை 18 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. கொழும்பு 13, 14, 15 ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதனிடையே, குறித்த காலப்பகுதியில் கொழும்பு 01, 11 மற்றும் 12 ஆகிய பகுதிகளில் குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படும் எனவும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. கொழும்பு பெருநகர் நீர் மற்றும் கழிவுநீர் முகாமைத்துவ வேலைத்திட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தப்பணிகள் காரணமாக நீர் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.