பொலிஸாருடன் பரஸ்பர துப்பாக்கிச்சூடு:ஒருவர் பலி

கம்பஹாவில் பொலிஸாருடன் பரஸ்பர துப்பாக்கிச்சூடு: 25 வயதானவர் உயிரிழப்பு

by Staff Writer 26-06-2020 | 4:04 PM
Colombo (News 1st) கம்பஹா - மல்வத்துஹிரிபிட்டி, புவக்வத்த பகுதியில் பொலிஸாருடன் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை 5.30 அளவில் கம்பஹா மல்வத்துஹிரிபிட்டி, புவக்வத்த வீதியில் பொலிஸாரினால் வாகனங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதன்போது, அடையாளம் காணப்படாத மோட்டார் சைக்கிளொன்று கெரவலப்பிட்டி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இடத்திற்கு சென்ற பொலிஸார் மீது அடையாளம் தெரியாத சிலர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதன்போது இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிச்சூட்டில் 25 வயதான சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் கம்பஹா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் 2018 ஆம் ஆண்டு கடவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் என பொலிஸார் தெரிவித்தனர்.