ஹெரோயினுடன் இருவர் பிலியந்தலையில் கைது

ஒரு கிலோகிராம் ஹெரோயினுடன் இருவர் பிலியந்தலையில் கைது

by Staff Writer 26-06-2020 | 3:40 PM
Colombo (News 1st) ஒரு கிலோகிராம் ஹெரோயினுடன் இருவர் பிலியந்தலையில் கைது செய்யப்பட்டுள்ளனர். கிடைத்த தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர்கள் இருவரும் மொரகஹஹேன பகுதியில் வாடகைக்கு வீடொன்றைப் பெற்று, ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கைப்பற்றப்பட்ட ஹெரோயினின் பெறுமதி ஒரு கோடி ரூபாவிற்கும் அதிகமென மதிப்பிடப்பட்டுள்ளது. மத்துகம மற்றும் கல்பாத பகுதிகளைச் சேர்ந்த 35 மற்றும் 33 வயதான ஆணொருவரும் பெண்ணொருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இருவரும் இன்று ஹொரணை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.