இதுவரை 2010 பேருக்கு தொற்று:1619 பேர் குணமடைந்தனர்

இதுவரை 2010 பேருக்கு கொரோனா தொற்று: 1619 பேர் குணமடைந்தனர்

by Staff Writer 26-06-2020 | 5:04 PM
Colombo (News 1st) நாட்டில் COVID-19 தொற்றுக்குள்ளான மேலும் 17 பேர் குணமடைந்துள்ளனர். இதனடிப்படையில், குணமடைந்தோரின் எண்ணிக்கை 1619 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனிடையே, நாட்டில் இதுவரை 2010 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். அவர்களில் 380 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டில் இதுவரை 11 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.