by Staff Writer 26-06-2020 | 3:20 PM
Colombo (News 1st) வௌிநாடுகளிலிருந்து கப்பல்கள் மூலம் நாட்டிற்கு அனுப்பப்பட்ட முகவரிகள் அழிந்த பொதிகளில் சுமார் 26,000 பொதிகளுக்கான முகவரிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கப்பல் மூலமாக அனுப்பப்பட்ட 45,000 பொதிகளில் 37 ஆயிரத்திற்கும் அதிகமான பொதிகளின் முகவரிகள் அழிந்திருந்தன.
இதனிடையே, அடையாளங்காண முடியாத நிலையில் இருந்த சுமார் 19,000 பொதிகள் மலேஷியாவிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய தபால் பரிமாற்றகம் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், முகவரிகள் கண்டுபிடிக்கப்பட்ட பொதிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக மத்திய தபால் பரிமாற்றகம் மேலும் தெரிவித்துள்ளது.