MCC இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

MCC மீளாய்வுக் குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

by Staff Writer 25-06-2020 | 3:48 PM
Colombo (News 1st) MCC மீளாய்வுக் குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது. பேராசிரியர் லலிதஶ்ரீ குணருவனின் தலைமையிலான குழுவினால் இந்த அறிக்கை ஜனாபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, MCC மீளாய்வுக் குழுவின் இறுதி அறிக்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிடம் நேற்று (24) கையளிக்கப்பட்டது. அமைச்சரவையின் அனுமதியுடன், பிரதமர் நியமித்த குழுவானது, MCC உடன்படிக்கை தொடர்பில் ஆறு மாதங்களாக ஆய்வு செய்தது. அத்துடன், பல்வேறு துறையினரின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை ஆராய்ந்து இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. சிபாரிசுகள் அடங்கிய குழுவின் இந்த அறிக்கை பிரதமரினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.